உள்ளூர் செய்திகள்
- கறவை மாடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது
- பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடைபல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெறுகிறது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் மன்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடைபல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவைமாடு வளர்ப்பு குறித்த ஒருநாள் இலவச பயிற்சி முகாம் வரும் 13ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது.இதில் கலந்து கொள்ள விரும்புவோர் நேரடியாக 13ம் தேதி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்குள் பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடைபல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு வந்து பயிற்சியில் பங்குகொள்ளுமாறும், மேலும் தகவலுக்கு இவ்வலுவலக தொலைபேசி எண்கள் 04324 294335 மற்றும் 7339057073 மூலம் தொடர்பு கொள்ளுமாறு மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் அமுதா கேட்டுக்கொண்டுள்ளார்.