உள்ளூர் செய்திகள்

மாயனுார் கதவணையில் மீன்கள் விற்பனை ஜோர்

Published On 2023-05-01 06:41 GMT   |   Update On 2023-05-01 06:41 GMT
  • மாயனுார் கதவணையில் மீன்கள் விற்பனை ஜோராக நடைபெற்றது
  • நேற்று மட்டும், 350 கிலோ வரை மீன்கள் விற்கப்பட்டன.

கரூர்:

கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனூர் காவிரியாற்றின் குறுக்கே கதவணை கட்டப் பட்டுள்ளது. இந்த கதவணையில் தண்ணீர் சேமிக்கப்பட்டு, மீன்கள் வளர்க்கப்படுகிறது. வளர்க்கப்படும் மீன்களை உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று வலைகளை விரித்து பிடித்துக் கொண்டு வந்து வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது மீன்கள் வரத்து சீராக இருப்பதால் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. ஜிலேபி மீன் கிலோ, 140 ரூபாய், கெண்டை மீன் 110 ரூபாய், விறால் மீன் 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மட்டும், 350 கிலோ வரை மீன்கள் விற்கப்பட்டன. மீன்களை வாங்க கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், மணவாசி, சேங்கல், பஞ்சப்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து வந்த மக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.

Tags:    

Similar News