உள்ளூர் செய்திகள்

தர்பூசணி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

Published On 2023-02-24 07:16 GMT   |   Update On 2023-02-24 07:16 GMT
  • தர்பூசணி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
  • கிலோ 15 ரூபாய்க்கு விற்பனையாகிறது

கரூர்:

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மணவாசி, கருப்பூர், சேங்கல், வரகூர் உள்ளிட்ட கிராமங்களில் விவ சாயிகள் பரவலாக தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். செடிகளில் விளைந்த தர்பூசணி பழங்களை, அறுவடை செய்து, கரூர், திருச்சி, மற்றும் உள்ளூர் வார சந்தைகளில் விற்று வருகின்றனர்.தற்போது தர்பூசணி பழம், கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெயில் அதிகமாக இருப்பதால் தர்பூசணி விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் தர்பூசணி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Tags:    

Similar News