உள்ளூர் செய்திகள்

கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2023-05-02 07:35 GMT   |   Update On 2023-05-02 07:35 GMT
  • கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
  • கோடை மழை காரணமாக வெயிலின் வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது

கரூர்:

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரகூர், மேட்டுப்பட்டி, வேங்காம்பட்டி, புதுப்பட்டி, பாலப்பட்டி ஆகிய இடங்களில் நேற்று மிதமான மழை பெய்தது. இந்த மழையால் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு, சோளம், வாழை ஆகிய பயிர்களுக்கு மழை நீர் கிடைத்து வருகிறது. மேலும் கோடை மழை காரணமாக வெயிலின் வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News