உள்ளூர் செய்திகள்

கார்த்திகை தீபத்தையொட்டி பூக்கள் விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2023-11-27 06:07 GMT   |   Update On 2023-11-27 06:07 GMT
  • பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லைப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அ ரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகை யான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
  • பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளதால் பூ க்கள் பயிர் செய்துள்ள விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர்.

வேலாயுதம் பாளையம்

கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம் ,சேமங்கி, முத்தனூர், கோம்பு ப்பாளையம், திருக்கா டுதுறை, பேச்சிப்பா றை , வேட்டமங்கலம் உள்ளி ட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லைப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அ ரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகை யான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

பூக்கள் பறிக்கும் தருவாய்க்கு வரும்போது விவசாயிகள் கூலி ஆட்கள் மூலம் பூக்களை பறித்து கோணிப்பைகளில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகில் செயல்பட்டு வரும் பூ ஏல மார்க்கெட்டிற்கும் தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கி ன்றனர் . இந்நிலையில் கடந்த வாரம் குண்டுமல்லி ரூ.700- க்கும், சம்பங்கி கிலோ ரூ.50- க்கும், அரளி கிலோ ரூ.100- க்கும், ரோஜா கிலோ ரூ.160- க்கும், முல்லைப் பூ ரூ.500- க்கும், செவ்வந்திப்பூ ரூ.100- க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் ஏலம் போனது.

கார்த்திகை தீபம், கிருத்திகை மற்றும் பவுர்ண மியை முன்னிட்டு நடை பெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.2,100-க்கும், சம்பங்கி கிலோ ரூ.150- க்கும், அரளி கிலோ ரூ.220- க்கும், ரோஜா கிலோ ரூ.280- முல்லைப் பூ கிலோ ரூ.1,800-க்கும், செவ்வ ந்திப்பூ ரூ.250- க்கும், கனகா ம்பரம் ரூ.1,200-க்கும் ஏலம். போனது.

பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளதால் பூ க்கள் பயிர் செய்துள்ள விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர்.

Tags:    

Similar News