உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி

Published On 2023-07-16 12:22 IST   |   Update On 2023-07-16 12:22:00 IST
  • கரூரில் மின்சாரம் தாக்கியதில் எலக்ட்ரீஷியன் பலியானார்
  • வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

கரூர்,

கரூர் மாவட்டம், நன்னியூர் புதுார் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் திவாகர் (வயது 23) .எலக்ட்ரீஷியன். இவர்,அதே பகுதியில் உள்ள, பாலசுப்பிரமணியன் என்பவரது வீட்டின் சுவற்றில், மின் இணைப்புடன் கூடிய, டிரில் மெஷின் மூலம் துளை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்த திவாகர், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதையடுத்து, திவாகரின் தாய் லட்சுமி கொடுத்த புகார்படி, வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News