உள்ளூர் செய்திகள்

மாவட்ட அளவிலான மல்யுத்த போட்டி

Published On 2023-10-29 07:05 GMT   |   Update On 2023-10-29 07:05 GMT
  • வேலாயுதம் பாளையத்தில் மாவட்ட அளவிலான மல்யுத்த போட்டி நடைபெற்றது
  • நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பஙகேற்பு

கரூர், 

மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான மல்யுத்த போட்டிகள் புகழூர் நகராட்சி அரசு காந்தியார் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் கலந்து கொண்டு மல்யுத்த போட்டியைத் தொடங்கி வைத்தார்.

காலை முதல் மாலை வரை நடைபெற்ற மல்யுத்த போட்டியில் நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 8 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு வகையான போட்டிகளில் விளையாடினார்கள். மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் புகழூர் நகராட்சி கவுன்சிலர்கள் நவீன், நந்தினி, தலைமை ஆசிரியை தமிழரசி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மல்யுத்த போட்டி நடுவர்கள், ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News