உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

Published On 2023-07-28 12:20 IST   |   Update On 2023-07-28 12:20:00 IST
  • கரூரில் காங்கிரஸ் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்
  • மணிப்பூர் பா.ஜ.க. அரசை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கரூர்

பெண்களிடம் பாலியல் வன்கொ டுமை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தவறிய மணிப்பூர் பா.ஜ.க. அரசை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க கோரியும் கரூர் தலைமை தபால் நிலையம் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தெற்கு மாநகர தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். கரூர் வடக்கு நகர காங்கிரஸ் தலைவரும், கரூர் மாநகராட்சியின் 9-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ஆர்.ஸ்டீபன் பாபு முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் மாவட்ட சேவாதள தலைவர் தாந்தோணி குமார்,

மாநகர துணை தலைவர் கண்ணப்பன், சண்முகசுந்தரம், அரவக்குறிச்சி நகர் மன்ற உறுப்பினர் பஜிலா பானு, புகலூர் நகர் மன்ற உறுப்பினர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் மலையாண்டி லீலாவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.   

Tags:    

Similar News