உள்ளூர் செய்திகள்

மாநகராட்சி சுவர்களில் வண்ணமிகு ஓவியங்கள்

Published On 2023-03-21 07:48 GMT   |   Update On 2023-03-21 07:48 GMT
  • சினிமா போஸ்டர்கள் ஒட்டுவதை தவிர்க்க ஓவியங்கள் வரையப்படுகிறது
  • விழிப்புணர்வு ஓவியங்களை ஓவியர்கள் தீவிரமாக வரைந்து வருகின்றனர்

கரூர்,

கரூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களிலும் உள்ள பூங்காக்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், மாநகராட்சி கட்டிடங்களின் சுற்றுச்சுவர்களில் அரசியல் மற்றும் சினிமா பதாகைகளை ஒட்டுவதை தவிர்க்கவும், பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு வண்ண வண்ண ஓவியங்கள் தீட்டும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. இயற்கை காட்சிகள், மழைநீர் சேகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, பெண் கல்வி, புகையிலை ஒழிப்பு, நெகிழி ஒழிப்பு ஆகியவை குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தும் பணியில் ஓவியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News