உள்ளூர் செய்திகள்

கரூரில் கல்லுாரி மாணவி மாயம்

Published On 2023-08-21 11:16 IST   |   Update On 2023-08-21 11:16:00 IST
  • நாச்சியார் புதுார் கிராமத்தை சேர்ந்த கல்லுாரி மாணவி மாயம்
  • தாய் புகாரின் பேரில் பாலவிடுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

கரூர்,

திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த, நாச்சியார் புதுார் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமாரி சத்துணவு உதவியாளர். இவரது மகள் சாந்தினி, முசிறி தனியார் கல்லுாரியில் பி.ஏ., தமிழ் படித்து வந்தார். கடந்த, 14ல், சுருமான்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில் இருந்த கல்லுாரி மாணவி, இரவு, 11:00 மணி முதல் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மகளை காணவில்லை என, தாய் கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார், கல்லுாரி மாணவியை தேடி வரு கின்றனர்.

Tags:    

Similar News