க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு
- க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்
- சூடாமணியில் ரூ.1.40 லட்சம் மதிப்பில் நுாலக கட்டடம் புனரமைக்கும் பணியை ஆய்வு செய்தார்
கரூர்,
கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்., பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார். இதில் பெரியதாதம் பாளையத்தில் ரூ.1.05 லட்சம் மதிப்பில் நடந்து வரும் சமையல் கூடம் புனரமைக்கும் பணி, சூடாமணியில் ரூ.1.40 லட்சம் மதிப்பில் நுாலக கட்டடம் புனரமைக்கும் பணி, வீடுகள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் பெரியார் சமத்துவபுரத்தில் உள்ள 78 வீடுகளை ரூ.3.90 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணி, தென்னிலை மேற்கில் ரூ.25.99 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஞ்., அலுவலக கட்டட பணிகளை பார்வையிட்டு விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை வாணி ஈஸ்வரி, உதவி பொறியாளர்கள் இளஞ்சேரன், பூர்ணமாதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, நீலகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.