உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணராயபுரத்தில் தென்னை பராமரிப்பு பணிகள்
- கிருஷ்ணராயபுரத்தில் தென்னை பராமரிப்பு பணிகள் நடைபெற்றது
- மரக்கன்றுகளுக்கு, பஞ்சாயத்தில் உள்ள நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மூலம் தண்ணீர் ஊற்றும் பணி நடந்தது
கரூர்:
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே, நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த மரக்கன்றுகளுக்கு, பஞ்சாயத்தில் உள்ள நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மூலம் தண்ணீர் ஊற்றும் பணி நடந்தது. மேலும், மரக்கன்றுகளை சுற்றி பாதுகாப்பு பணி செய்யப்பட்டது. பஞ்சாயத்து நிர்வாகத்தினர் பணிகளை மேற்பார்வையிட்டனர்.