உள்ளூர் செய்திகள்

கரூரில் சேவல் சண்டை

Published On 2023-07-18 12:20 IST   |   Update On 2023-07-18 12:20:00 IST
  • கரூரில் சேவல் சண்டை நடைபெற்றது
  • சேவல் சண்டையில் ஈடுபட்ட4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர், 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் உள்ளிட்ட போலீசார் கூலிக்காரன் வலசு பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அந்த பகுதியில் சட்ட விரோதமாக சேவல் சண்டை நடத்தி யதாக, திண்டுக்கல்லை சேர்ந்த சதீஷ் (வயது 35), ரவி (36), பொள்ளாச்சியை சேர்ந்த நல்லமுத்து (33), நந்தகுமார் (35), ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, இரண்டு சேவல்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News