உள்ளூர் செய்திகள்

மாணவிகளுக்கு கண்ணாடி வழங்கும் விழா

Published On 2023-08-02 11:56 IST   |   Update On 2023-08-02 11:56:00 IST
  • புகளூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு கண்ணாடி வழங்கும் விழா நடைபெற்றது
  • நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் மாணவிகளுக்கு கண்ணாடி வழங்கினார்

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம் புகளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதலமைச்சரின் பள்ளி மாணவிகளுக்கு கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ், புகழூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன் கலந்து கொண்டு பள்ளியில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவிகளுக்கு கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் கண் கண்ணாடி வழங்கி கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சியினை சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார்.விழாவில், கண் மருத்துவர் முருகானந்தம், நகர்மன்ற உறுப்பினர்கள், தலைமையாசிரியை, ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News