உள்ளூர் செய்திகள்
பிள்ளபாளையத்தில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு
- பிள்ளபாளையத்தில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது
- குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்,
கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிள்ளபாளையம் பஞ்சாயத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக, காவிரியாற்றிலிருந்து குழாய் வழியாக குடிநீர் கொண்டு வந்து நீர்தேக்க தொட்டியில் ஏற்றி, மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக காவிரியாற்றிலிருந்து வரும் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியபடி உள்ளது. இதனால் மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் காவிரி குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.