உள்ளூர் செய்திகள்
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்கு
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்கு
வேலாயுதம் பாளையம்,
கரூர் மாவட்டம் பாலத்துறை அருகே உள்ள பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா ,பான்பராக் ,ஹான்ஸ் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்கு விரைந்து சென்று சோதனை செய்த போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது .
இதன் பேரில் அவற்றை பறிமுதல் செய்த போலீசார் விற்பனை செய்த பாலத்துறை பகுதியை சேர்ந்த மணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.