உள்ளூர் செய்திகள்

வாகன விதிமீறலில் ஈடுபட்ட 1,204 பேர் மீது வழக்கு

Published On 2023-08-17 14:18 IST   |   Update On 2023-08-17 14:18:00 IST
  • கரூரில் வாகன விதிமீறலில் ஈடுபட்ட 1,204 பேர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது
  • வாகன விதி மீறலில் ரூ.13.70 லட்சம் அபராதம் வசூல்

கரூர்,

குளித்தலை காவல் உட்கோட்டத்தில் குளித்தலை, தோகைமலை, லாலாப் 'பேட்டை, மாயனூர், சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குளித்தலை போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாத வாகன சோதனையில் லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வந்தது. குடிபோதையில் வாகனம் ஓட்டியது, ஓட் டுநர் உரிமம் இல்லாதது, தலைக்கவசம் அணியாதது, காப்பீடு இல்லாதது. இருசக்கர வாகனத்தில் 3 பேர் சென்றது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது, உரிய நம்பர் பிளேட் பொருத்தாமல் இருந்தது. தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்தியது. சீட் பெல்ட் அணியாதது போன்ற பல்வேறு விதிமீற லில் ஈடுபட்ட 1,204 பேர் மீது வழக்குப்பதிவு செய் யப்பட்டு ரூ.13 லட்சத்து 70 ஆயிரம் அபராதம் விதிக் கப்பட்டுள்ளது. இத்தகவலை குளித் தலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News