உள்ளூர் செய்திகள்

மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

Published On 2023-10-16 08:49 GMT   |   Update On 2023-10-16 08:49 GMT
  • கரூர் நன்னியூர் புதூரில் அரசு மணல் கிடங்கை முற்றுகையிட்டு மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
  • மீண்டும் மணல் அள்ள அனுமதி கோரி போராட்டம்

கரூர்,

கரூர் மாவட்டம் நன்னியூர் புதூரில் செயல்பட்டு வரும் அரசு மணல் கிடங்கை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து கரூர் மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில்,

கரூர் மாவட்டம் மன்மங்கலம் வட்டம் நன்னியூர் புதூர் கிராமத்தில் அரசு மணல் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த மணல் கிடங்கில் கடந்த ஒன்றரை மாதங்களாக அமலாக்கத்துறை சோதனையால் குவாரிகள் மூடப்பட்டு மாட்டு வண்டியில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் தங்களது மாடுகளுக்கு தீவனமாக வாங்க முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளதால் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் குவாரியில் மணல் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். தஞ்சை போன்ற மாவட்டங்களில் மாட்டு வண்டியில் மணல் அல்ல அனுமதி இருக்கும் நிலையில் கரூர் மாவட்டத்திலும் மாட்டு வண்டியில் மணல் அல்ல அனுமதி வழங்க வேண்டும். இந்த நிலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் மூலம் லாரிகளுக்கு மணல் அல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்தவுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் அரசு மணல் கிடங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும் மாட்டுவண்டியில் மணல் அள்ள அனுமதி கொடுக்கவில்லை என்றால் நாளை மறுநாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News