உள்ளூர் செய்திகள்

சிறுவன், சிறுமி மாயம்

Published On 2023-07-17 11:50 IST   |   Update On 2023-07-17 11:50:00 IST
  • குளித்தலை அருகே சிறுவன், சிறுமி மாயமாகி உள்ளனர்
  • பாட்டி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தேடி வருகின்றனர்

கரூர், 

குளித்தலை அடுத்த, பாப்பயம்பாடி இந்திரா நகர் காலனியை சேர்ந்தவர் மருதாயி (வயது 45) கூலித்தொழிலாளி. இவரது மகள் செல்லம்மாள், பேரக்குழந்தை விஜய், இருவரும் கடந்த, 13 மாலை வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றனர். ஆனால், இதுவரை வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, மருதாயி கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார், மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News