உள்ளூர் செய்திகள்
- தளவாபாளையத்தில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- தி.மு.க. அரசை கண்டித்து
வேலாயுதம்பாளையம்,
கரூர் மேற்கு ஒன்றிய பாஜக சார்பில், தி.மு.க. அரசை கண்டித்து தளவாபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் நல்லசிவம் தலைமை வகித்தார். கரூர் மேற்கு ஒன்றிய பார்வையாளரும், மருத்துவ பிரிவு மாநில செயலாளருமான டாக்டர் அரவிந்த் கார்த்திக் தி.மு.க. அரசை கண்டித்து பேசினார். தொடர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கரூர் ஒன்றிய பொது செயலாளர் ராதாகிருஷ்ணன், தம்பிதுரை, ஒன்றிய செயலாளர் பாலச்சந்திரன், துணைத் தலைவர் ராமச்சந்திரன், பிரச்சார பிரிவு தலைவர் சேனாபதி, ஐடி பிரிவு தலைவர் கவியரசு, மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாவட்ட செயலாளர் முருகேசன், ஒன்றிய மகளிரணி தலைவி பிரியா உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.