உள்ளூர் செய்திகள்

ஜே.சி.பி. வாகனத்தில் பைக் மோதி வாலிபர் படுகாயம்

Published On 2023-11-05 06:28 GMT   |   Update On 2023-11-05 06:44 GMT
  • பைக்கை அதிவேகமாக ஒட்டி வந்து பொக்லின் வாகனத்தின் பின்னால் மோதியதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
  • ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

வேலாயுதம் பாளையம்

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குறுக்குச்சாலை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விவேக்(32). இவர் பொக்லின் டிரைவர் . இந்நிலையில் இவர் தனக்கு சொந்தமான பொக்லின் வாகனத்தை கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது மலையம்பாளையம் பிரிவு சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் ஜேசிபி இயந்திரத்திற்கு பின்னால் அதிவேகமாக வந்த செம்மடையை சேர்ந்த பேக்கரி உரிமையாளர் விக்னேஷ்(23) என்பவர் மோட்டார் பைக்கை அதிவேகமாக ஒட்டி வந்து பொக்லின் வாகனத்தின் பின்னால் மோதியதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அது பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பொக்லின் வாகனத்தின் டிரைவர் விவேக் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News