உள்ளூர் செய்திகள்

இருசக்கர வாகனம் திருட்டு

Published On 2023-05-30 05:57 GMT   |   Update On 2023-05-30 05:57 GMT
  • கரூரில் இருசக்கர வாகனம் திருட்டு
  • போலீசார் விசாரணையில் வாலிபர் கைது செய்யப்பட்டார்

கரூர், 

கரூர், பள்ளப்பாளையத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 42) இவர் கடந்த, 15-ந்தேதி கரட்டுப்பாளையம் கன்னிமார் கோவில் அருகே, தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, கரூர் ராயனூரை சேர்ந்த பிரசாந்த் (21) வெங்கமேட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

Similar News