உள்ளூர் செய்திகள்

பேக்கரி மாஸ்டர் தற்கொலை

Published On 2023-02-02 07:26 GMT   |   Update On 2023-02-02 07:26 GMT
  • தாய் கண்டித்ததால் விபரீதம்
  • பேக்கரி மாஸ்டர் தற்கொலை செய்து கொண்டார்

கரூர்,

குளித்தலை அருகே உள்ள கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் ரேவந்த் (வயது 28). பேக்கரி கடையில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர், கடந்த சில நாட்களாக வேலைக்கு சரிவர செல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவரது தாய் மங்கையர்க்கரசி கண்டித்தார். இதில் மன உளைச்சலில் இருந்த ரேவந்த், முத்தம்பட்டி நால்ரோடு அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ரேவந்த் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மங்கையர்க்கரசி, கொடுத்த புகாரின்படி, லாலாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News