உள்ளூர் செய்திகள்

கரூர் 9-வது வார்டில் பகுதி சபா கூட்டம்

Published On 2022-11-06 08:55 GMT   |   Update On 2022-11-06 08:55 GMT
  • கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு வெங்கமேடு பகுதியில், பகுதி சபா கூட்டம் நடைபெற்றது
  • கூட்டத்தில் வார்டில் ரோடு அமைத்தல், இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கரூர்,

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு வெங்கமேடு பகுதியில், பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கரூர் மாநகராட்சி 9-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், கரூர் வடக்கு நகர காங்கிரஸ் தலைவருமான ஸ்டீபன் பாபு கலந்து கொண்டார். கூட்டத்தில் பொதுமக்கள் பேசுகையில், தங்கள் வார்டில் ரோடு அமைத்தல், இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல், முதியோர் உதவித்தொகை கேட்டு மனுக்களை கொடுத்தனர்.

இதற்கு பதில் அளித்து பேசிய மாநகராட்சி உறுப்பினர் ஸ்டீபன் பாபு கொடுக்கப்பட்ட மனுக்கள் கோரிக்கையாக மாநகராட்சியில் கொடுத்து நிறைவேற்றித் தரப்படும் என உறுதி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் சண்முகம், சபா உறுப்பினர்கள் அருள்முருகன், சுப்பிரமணி, அண்ணாதுரை மற்றும் சேகர், ஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News