உள்ளூர் செய்திகள்

அரவக்குறிச்சி கல்லூரி மாணவர்கள் தேர்வு

Published On 2023-08-18 11:21 IST   |   Update On 2023-08-18 11:21:00 IST
  • மாநில கைப்பந்து போட்டி அரவக்குறிச்சி கல்லூரி மாணவர்கள் தேர்வு
  • மாணவர்களை கல்லூரி முதல்வர், உடற்கல்வித்துறை இயக்குநர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

கரூர் 

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு, கரூர் மாவட்ட அணியில் விளையாட, அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் மாநில அளவிலான ஆண்கள் கைப்பந்து போட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் நடை பெற உள்ளது. இப்போட்டியில், அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 5 பேர், கரூர் மாவட்ட கைப்பந்து அணியில் விளையாட தேர்வு பெற்றுள்ளனர். இந்த மாணவர்களை கல்லூரி முதல்வர், உடற்கல்வித்துறை இயக்குநர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News