உள்ளூர் செய்திகள்

வாலிபர் திடீர் மாயம்

Published On 2023-07-16 12:24 IST   |   Update On 2023-07-16 12:24:00 IST
  • கரூர் மாவட்டம் புகளூர் பகுதியில் வீட்டில் இருந்த வாலிபர் திடீர் மாயமானார்
  • வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்

கரூர்.

புகளூர் ஈஐடி பாரி காலனியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன் (வயது58).இவரது மனைவி மாரியம்மாள் (54). இவர்களது மகன் நரேஷ்குமார் (33).இவர் புகளூர் செம்படா பாளையத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் டிப்ளமோ ட்ரெயினிங் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வீட்டில் இருந்த நரேஷ் குமார் தனக்கு அரசு வேலை கிடைக்கவில்லை என மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் இருந்த வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

பல்வேறு இடங்களில் தேடியும் நரேஷ் குமார் கிடைக்க வில்லை இது குறித்து அவரது தந்தை ராமகிருஷ்ணன் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு வேலாயுத ம்பாளையம் போலீஸ் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெ க்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து நரேஷ் குமார் தானாக எங்காவது சென்று விட்டாரா அல்லது வெளியில் இருந்த போது அவரை யாரேனும் கடத்திச் சென்று விட்டானரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News