உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2023-08-29 06:49 GMT   |   Update On 2023-08-29 06:49 GMT
  • கரூர் குறுவட்ட அளவிலான நடைபெற்ற தடகளப் போட்டிகளில் புஞ்சை தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை
  • சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள்,அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினார்கள்

வேலாயுதம்பாளையம்,

கரூர் குறுவட்ட அளவிலான நடைபெற்ற தடகளப் போட்டிகளில் புஞ்சை தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 17 வயதிற்கு உட்பட்ட கோலூன்றித் தாண்டுதல் பிரிவில் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அருள் முருகன் 2-ம் இடமும் , நிஷ்வன் 3-ம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர் . மேலும் முதல் இடம் பெற்றுள்ள புகழூர்அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் விஷ்ணுவும் கடந்த ஆண்டு புஞ்சை தோட்டக்குறிச்சி உயர்நிலைப் பள்ளியில் 10 -ம் வகுப்பு முடித்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. கோலூன்றி தாண்டுதல் பிரிவில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள்,அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினார்கள்.

Tags:    

Similar News