அரசு தொடக்க பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம்
- குளித்தலை அருகே அரசு தொடக்க பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம்
- ரா.மாணிக்கம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் குளித்தலை எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தோகைமலை, கழுகூர் ஊராட்சி கன்னிமார் பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடத்தையும், தொடர்ந்து நங்கவரம் பேரூராட்சிக்குட்பட்ட நங்கவாரத்தில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடத்தையும், சிவாயம் ஊராட்சி இரும்பூதிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், கூடலூர் ஊராட்சி பொம்மநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், கீழவெளியூர் ஊராட்சி கீழவெளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், நங்கவரம் பேரூராட்சிக்குட்பட்ட குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் (ஸ்மார்ட் கிளாஸ்) தொடுதிரை வகுப்புகளை எம்.எல்.ஏ. ரா மாணிக்கம் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்,உடன் குளித்தலை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சூரியனூர் சந்திரன், தோகைமலை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் புழுதேரி அண்ணாதுரை, நங்கவரம் பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி, செயல் அலுவலர் வேல்முருகன், நங்கவரம் பேரூராட்சி துணைத் தலைவர் அன்பழகன், நங்கவரம் பேரூர் கழக செயலாளர் முத்து என்கின்ற சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி வை.புதூர் பெரியசாமி, குளித்தலை நகர பொருளாளர் தமிழரசன் கழுகூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துசாமி, தோகைமலை ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சசிகுமார், பொதுக்குழு உறுப்பினர் தர்மர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், ஒப்பந்தக்காரர் வேலுச்சாமி மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள், கல்வித்துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி துறை அலுவலர்கள்,ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.