உள்ளூர் செய்திகள்
- இரண்டு மகன்கள் உள்ள நிலையில் வீட்டை விட்டு சென்று விட்டார்
- புகாரின் பேரில் வழக்கு பதிந்து தேடி வரும் போலீசார்
கரூர்,
தரகம்பட்டியை அடுத்த, சுண்டுக்குழிபட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47). விவசாயி, இவரது மகள் சங்கீதா (28). இவருக்கு, அதே ஊரை சேர்ந்த கருணாகரன் என் பவருடன் திருமணமாகி, இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற சங்கீதா, அதன் பிறகு மீண்டும் வீட்டுக்கு திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தக வலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, தனது மகளை கண்டுபிடித்து தருமாறு, முருகேசன் கொடுத்த புகாரின்படி, சிந்தாமணிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.