உள்ளூர் செய்திகள்
மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
- மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு நடந்துள்ளது
- வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது நடந்த சம்பவம்
கரூர்:
வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் நள்ளிரவில் 5 பவுன் சங்கிலி பறித்து சென்ற மர்மநபரை வாங்கல் போலீஸார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் வாங்கல் கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுப்புரெத்தினம். இவர் மனைவி ஜெயம்மாள் (வயது 70). இவர் சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர், ஜெயம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டான். இதுகுறித்து வாங்கல் போலீசில் ஜெயம்மாள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.