உள்ளூர் செய்திகள்

சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது

Published On 2023-11-17 11:55 IST   |   Update On 2023-11-17 11:55:00 IST
கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி வாய்க்கால் கரை பகுதியில்சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது

வேலாயுதம் பாளையம், 

கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி வாய்க்கால் கரை பகுதியில் ஒருவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு ஒருவர் மதுப்பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அதன் பேரில் தோட்டக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பூபதி (வயது 30) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதுப்பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்த மணிராஜ் (33) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.  

Tags:    

Similar News