உள்ளூர் செய்திகள்

1008 விளக்கு ஏற்றப்பட்ட காட்சி.


புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் கார்த்திகை திருவிழா

Published On 2022-12-07 09:27 GMT   |   Update On 2022-12-07 09:27 GMT
  • புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், பால நாகம்மன், நாககன்னி அம்மன் ஆலயத்தில் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
  • மாலை 6 மணி அளவில் கோவில் முழுவதும் கார்த்திகை தீபத்திருநாள் 1008 விளக்கு ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

புளியங்குடி:

புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், பால நாகம்மன், நாககன்னி அம்மன் ஆலயத்தில் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவையொட்டி அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டு அம்மாக்களுக்கு பால், தயிர், குங்குமம், தேன், சந்தனம் உள் பட 18 வகையான அபிஷேகம் செய்து சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாரதனை காண்பிக்கப்பட்டது. மாலை 5 மணி அளவில் கார்த்திகை தீப திருநாள் குறித்து குருநாதர் சக்தியம்மா பக்தர்களுக்கு ஆன்மீக சொற் பொழிவாற்றினார். மாலை 6 மணி அளவில் கோவில் முழுவதும் கார்த்திகை தீபத்திருநாள் 1008 விளக்கு ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

Tags:    

Similar News