உள்ளூர் செய்திகள்

கொடியேற்றம் நடந்தது.

சுவாமிமலை கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்

Published On 2022-11-28 09:41 GMT   |   Update On 2022-11-28 09:41 GMT
  • கார்த்திகை தினத்தன்று காலை திருத்தேர் வடம் பிடித்து திருவீதி.
  • கார்த்திகை தீபம் ஏற்றி வீதியில் சொக்கப்பனை கொளுத்துதல் நிகழ்ச்சி.

சுவாமிமலை:

அறுபடை வீடுகளில் நான்காம் படைவீரான சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவிலில் திருக்கா ர்த்திகை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகின்ற 8-ந் தேதி வரை 12 நாட்கள் விழா நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு இன்று காலை 9 முதல் 10.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகே ஸ்வரர், பரிவாரங்களுடன் படி இறங்கி உற்சவ மண்டபம் எழுந்தருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இரவு திருவீதி உலா நடைபெற உள்ளது.

அதனை தொடர்ந்து நாளை முதல் 1-ம் தேதி முடிய காலை சுவாமி படிச்சட்டத்திலும் இரவு வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.

அதனை தொடர்ந்து 2 - ந் தேதி காலை சுவாமி படிச்சிட்டத்திலும் இரவு பஞ்ச மூர்த்திகளுடன் 5 சப்பரத்தில் எழுந்து திருவீதி உலா நடைபெறும். 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை காலை சுவாமி படிச்சட்டத்திலும் இரவு வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது.

அதனை தொடர்ந்து 6-ம் தேதி திருக்கார்த்திகை தினத்தன்று காலை திருத்தேர் வடம் பிடித்து திருவீதி புறப்பாடும்.

இரவு தங்கமயில் மற்றும் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்று கார்த்திகை தீபம் ஏற்றி திருவீதியில் சொக்கப்பனை கொளுத்துதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

7-ம் தேதி சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் இரவு அவரோகணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு பக்தர்க ளுக்கான சிறப்பு வசதிகள் செய்ய முன்னேற்பாடுகளை கோவில் துணைஆணையர் உமாதேவி, கண்காணிப்பா ளர்கள் சுதா, பழனிவேல், மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News