உள்ளூர் செய்திகள்
புற்றுக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்ற காட்சி.
கோவில்பட்டி புற்றுக்கோவிலில் கார்த்திகை சோமவார சிறப்பு பூஜை
- 108 சங்காபிஷேகமும் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.
- பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் கார்த்திகை சோமவார சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதனையொட்டி காலை 11 மணிக்கு சங்கல்பம், கணபதி பூஜை, ஸ்பதன கும்பகலச பூஜை, 108 சங்கு பூஜை, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சங்கரலிங்க சுவாமிக்கு 18 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், 108 சங்காபிஷேகமும் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார். விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.