உள்ளூர் செய்திகள்

காரைக்காலில்ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பீச் வாலிபால் போட்டி

Published On 2023-10-30 09:00 GMT   |   Update On 2023-10-30 09:00 GMT
இறுதி, அரை இறுதிப்போட்டிகள் நடத்தப் பட்டு இறுதிப்போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெற்ற அணி களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.

புதுச்சேரி:

காரைக்கால் நிரவியில் இயங்கி வரும் ஓ.என்.சி. சார்பில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடை பிடிக்கப் பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் கடற்கரை பகுதியில், புதுச்சேரி மாநில அளவிலான இருபாலருக்கும் பீச்வாலிபால் போட்டி நடை பெற்றது. போட்டிகளை ஓ.என்.சி. காவிரி அசட் மேலாளர் உதயபாஸ்வான் தலை மை தாங்கி தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப் பாளராக இன்டர் நேஷனல் வாலிபால் வீரர் நடராஜன் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.

இப்போட்டியில் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பிராந்தியங்களை சேர்ந்த 36 ஆண்கள் அணிகள், 16 பெண்கள் அணிகள் கலந்து கொண்டனர். இதில் அரசுத்துறை யினர், காவல்துறை யை சேர்ந்த வாலிபால் அணிகளும் கலந்து கொண்டு விளையா டியது. லீக் முறையில் போட்டிகள் நடந்து வரு கிறது. இதைத்தொடர்ந்து கால் இறுதி, அரை இறுதிப்போட்டிகள் நடத்தப் பட்டு இறுதிப்போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெற்ற அணி களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.நிகழ்ச்சியில் ஓ.என்.சி. அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகளை ஓ.என்.ஜி.சி மேலாளர் (எச்ஆர்) காமராஜ், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு அதி காரி பாலாஜி மற்றும் பலர் செய்தி ருந்தனர். ஏராள மான பொதுமக்கள் போட்டி யை கண்டுகளித்தனர்.

Tags:    

Similar News