உள்ளூர் செய்திகள்

திருவட்டார் அருகே சாலையில் உள்ள பள்ளம் சீரமைக்கப்படுமா?

Published On 2023-11-03 07:48 GMT   |   Update On 2023-11-03 07:48 GMT
  • வாழை மரம் நட்டதால் பரபரப்பு
  • தினமும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

திருவட்டார்:

பேச்சிப்பாறை முதல் மார்த்தாண்டம் வரை உள்ள சாலையானது மிகவும் பரப்பரப்பாக காணப்படும் காலை, மாலை வேளைகளில் அதிக அளவு வாகனங்கள் செல்லும். புத்தன்கடை பகுதியில் ஒரு பள்ளிக்கூடம் உள்ளது. அதன் அருகில் ரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. அதை சரி செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. தற்போது தினமும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

இதனால் ரோட்டில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தனர். அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளும் மழை காலங்களில் பள்ளத்தில் விழுந்தார்கள். இதை கருத்தில் கொண்டு அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ரோட்டில் ஏற்பட்ட பள்ளத்தில் வாழை மரத்தை நட்டு அதன் மீது மாலை போட்டு பள்ளத்தில் வைத்துள்ளனர். மீண்டும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழாமல் இருக்க கல் வைத்துள்ளனர். எனவே பெரும்விபத்து நடைபெறும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News