உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்ட அணிக்கு கால்பந்து விளையாட்டு வீரர்கள் தேர்வு

Published On 2023-09-29 08:05 GMT   |   Update On 2023-09-29 08:05 GMT
  • வருகிற 3-ந்தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
  • இதில் பங்குபெற விரும்பும் விளையாட்டு வீரர்கள் ஆதார் அட்டையுடன் கலந்துகொள்ள வேண்டும்.

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 வயதுக்குட்பட்ட இளையோர் கால்பந்து அணிக்கான விளையாட்டு வீரர்கள் தேர்வு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து வருகிற 3-ந்தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் பங்குபெற விரும்பும் விளையாட்டு வீரர்கள் ஆதார் அட்டையுடன் கலந்துகொள்ள வேண்டும். அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந் தேதி முதல் 15ந் தேதி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கால்பந்து கழகம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்பட்ட குமரி மாவட்ட கால்பந்து விளையாட்டு வீரர்கள் இந்த போட்டியில் பங்கு பெறுவார்கள். விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு குமரி மாவட்ட கால்பந்து கழக பொருளாளர் ஆனந்த் ஏ.வில்சன் தலைமையில் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News