உள்ளூர் செய்திகள்

கொள்ளை போன பேன்சி கடை.

கன்னியாகுமரியில் 2-வது முறையாக பேன்சி கடையில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரம்

Published On 2023-03-02 08:28 GMT   |   Update On 2023-03-02 08:28 GMT
கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை

கன்னியாகுமரி, மார்ச்.2-

கன்னியாகுமரி நடுத்தெருவை சேர்ந்தவர் லால் சந்த் (வயது 55).

இவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் சன்னதி தெருவில் பாலாஜி பேன்சி ஸ்டோர் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். இங்கு மேலா ளராக பக்சாராம் (50) பணி யாற்றி வருகிறார்.

இவர் நேற்று முன் தினம் இரவு 9 மணிக்கு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது கடையின் உள் பக்க அறையின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் கடையின் மேற் கூரை ஆஸ்பெஸ்டாஸ் சீட்டும் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அவர், கடையில்உள்ள கல்லா பெட்டியை திறந்து பார்த்தார். அப்போதுஅதில் வைத்திருந்தரூ.14ஆயிரத்து 500திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது.

இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு அவர் தகவல் கொடுத்தார். அதன்பேரில் துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று விசா ரணைநடத்தினார்கள்.

கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்த னர். கடந்த 4 மாதங் களுக்கு முன்பு இதே கடையில் மேற் கூரையை உடைத்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளை அடிக்க ப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

அதில் துப்பு துலங்கு வதற்கு முன்பு இப்போது 2-வது முறையாக கொள்ளை நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி அதில் சந்தேகப்படும் படியான உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News