உள்ளூர் செய்திகள்

இரணியல் அருகே 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு

Published On 2023-10-25 08:21 GMT   |   Update On 2023-10-25 08:21 GMT
  • மர்ம நபர்கள் அட்டகாசம்
  • திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இரணியல்:

இரணியல் அருகே காரங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜாண் சேவியர் ராஜ் (வயது 69). முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ஆலன்விளை பகுதியில் உள்ள தனது ஒரு ஏக்கர் நிலத்தில் வாழை விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் வாழை தோட்டத்தை பார்வையிட சென்றார். அங்கு அவரது தோட்டத்திலும், பக்கத்து தோட்டத்திலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து ஜாண் சேவியர் ராஜ் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News