உள்ளூர் செய்திகள்

தொடர் விடுமுறையையொட்டி 6 நாட்களில் விவேகானந்தர் மண்டபத்தை 37 ஆயிரத்து 660 பேர் பார்வையிட்டுள்ளனர்

Published On 2023-10-04 13:49 IST   |   Update On 2023-10-04 13:49:00 IST
  • மழையினால் நேற்று ஒரே நாளில் 3800 பேர் பார்த்தனர்.
  • சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

கன்னியாகுமரி:

சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இருப்பினும் சீசன் காலங்களிலும் வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களிலும் பண்டிகை கால தொடர்விடுமுறை நாட்களிலும் வழக்கத்தை விட அதிகமான அளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் பள்ளி களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதாலும், மிலாடி நபி விடுமுறை நாளான கடந்த மாதம் 28-ந்தேதி முதல் காந்தி ஜெயந்தி யான கடந்த 2-ந்தேதி வரை தொடர் விடுமுறை என்ப தால் கன்னியாகுமரிக்கு தமிழ்நாடு மட்டும் இன்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணமாக இருந்தனர்.

தொடர் விடுமுறையை யொட்டி கடந்த மாதம் 28-ந்தேதி முதல் இந்த மாதம் 3-ந்தேதி வரை 6 நாட்களில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 37 ஆயிரத்து 660 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வை யிட்டு வந்து உள்ளனர். மழையின் காரணமாக நேற்று விடுமுறை விடப்பட்டி ருந்தாலும் 3,800 பேர் மட்டுமே விவேகா னந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர். இதன் மூலம் பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழக நிறுவனத்துக்கு சுமார் ரூ.50 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

Tags:    

Similar News