உள்ளூர் செய்திகள்

பிடிபட்ட டிரைவர் அஜித்.

குலசேகரம் அருகே கேரளாவுக்கு கடத்திய 2 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2023-01-05 08:05 GMT   |   Update On 2023-01-05 08:05 GMT
போலீசார் அதிரடி நடவடிக்கை

கன்னியாகுமரி:

கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக குலசேகரம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் குலசேகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் குலசேகரம் அரசுமூடு பகுதியில் வாகன சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதி வேகமாக சொகுசு கார் வந்தது. உடனே போலீசார் காரை தடுத்து நிறுத்தினார்கள். அவர்கள் காரை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.

இதனைத்தொடர்ந்து காரை சோதனை செய்த போது மூட்டை மூட்டையாக 2 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து கார் டிரைவரிடம்நடத்திய விசாரணையில் அவர் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த அஜித் (வயது 23) என்பதும், அந்த பகுதியில் உள்ளவர்களிடம் குறைந்த விலை கொடுத்து ரேசன் அரசி வாங்கி கார் மூலம் கேரளாவுக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இது குறித்து உடனே உணவு பாதுகாப்பு தடுப் பு பிரிவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News