உள்ளூர் செய்திகள்

ஆசாரி பள்ளத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை

Published On 2022-11-03 12:45 IST   |   Update On 2022-11-03 12:45:00 IST
  • சங்கரகுமார் ஏற்கனவே பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார்
  • சம்பவத்தன்று பத்மலட்சுமி எறும்பு பொடியை தின்று வாயில் நுரை தள்ளியபடி கிடந்தார்.

கன்னியாகுமரி :

ஆசாரிபள்ளம் அருகே மேல பெருவிளை பகுதி யைச் சேர்ந்தவர் சங்கர குமார் மனைவி பத்ம லட்சுமி (வயது 59).

இவரது கணவர் சங்கரகுமார் ஏற்கனவே பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். இவர் வீட்டில் அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு நடப்பது வழக்கம்.

சம்பவத்தன்று பத்மலட்சுமி எறும்பு பொடியை தின்று வாயில் நுரை தள்ளியபடி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி பத்ம லட்சுமி பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் குறித்து அவரது மகள் தங்க சுபா கொடுத்த புகாரின் பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News