உள்ளூர் செய்திகள்

குமரி கலைக்கழக போட்டியில் புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு வெற்றி கோப்பை

Published On 2023-10-11 07:28 GMT   |   Update On 2023-10-11 07:28 GMT
  • பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு வகையான கலைப் போட்டிகள்
  • பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சார்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

நாகர்கோவில் :

குமரி கலைக்கழகத்தின் 37-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு வகையான கலைப் போட்டிகள் நடைபெற்றன. பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சார்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி நுண்கலை மன்ற மாணவ-மாணவிகள் பெரு வாரியான போட்டிகளில் வெற்றி பெற்று கல்லூரிக்கான ஒட்டு மொத்த வெற்றிக்கோப்பையை பெற்றனர். பரிசுகள் வென்ற மாணவ - மாணவி களை கல்லூரி தாளாளர் மரிய வில்லியம், முதல்வா் டாக்டர் மகேஸ்வரன், காப்பாளர் பிரான்சிஸ் சேவியர் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தினர்.

Tags:    

Similar News