உள்ளூர் செய்திகள்

புனித அல்போன்சா கல்லூரியில் பல்கலைக்கழக அளவிலான கைப்பந்து போட்டி

Published On 2023-11-20 07:16 GMT   |   Update On 2023-11-20 07:16 GMT
  • 15 அணிகள் கலந்து கொண்டன
  • போட்டியில் முதலிடத்தை சங்கரன்கோவில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கலைக்கல்லூரி பெற்றது

மார்த்தாண்டம் :

கருங்கல் சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடை யேயான ஆண்கள் கைப்பந்து போட்டி நடை பெற்றது. போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 15 அணிகள் கலந்து கொண்டன. இதன் நிறைவு விழா கல்லூரி அரங்கில் நடந்தது. துணை உடற்க ல்வித்துறை இயக்குனர் பி.அனுஷா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தி னராக மனோ ன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை இயக்குனர் ஆறுமுகம் மற்றும் கன்வீனர் ஜான் ரஸ்கின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போட்டியில் முதலி டத்தை சங்கரன்கோவில் பசும்பொன் முத்துராம லிங்க தேவர் கலைக்கல்லூ ரியும், 2-வது இடத்தை தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியும், 3-வது இடத்தை சூசைபுரம் புனித அல்போன்சா கல்லூரியும், 4-வது இடத்தை அம்பை ஆர்ட்ஸ் கல்லூரியும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு புனித அல்போன்சா கல்லூரி தாளா ளர் மற்றும் செய லாளர் அருட்பணியாளர் ஆன்றனி ஜோஸ், முதல்வர் அருட்பணியாளர் மைக்கேல் ஆரோக்கிய சாமி, கல்லூரி வளாக வழிகாட்டி அருட்ப ணியாளர் அஜின்ஜோஸ், துணை முதல்வர் ஆர்.சிவனேசன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

Tags:    

Similar News