உள்ளூர் செய்திகள்

வடசேரியில் மாயமான இளம்பெண்ணை தேடும் பணி தீவிரம்

Published On 2023-11-09 07:01 GMT   |   Update On 2023-11-09 07:01 GMT
  • போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை
  • மகளை மீட்டு தரகோரி நகோமி வடசேரி போலீசில் புகார் செய்தார்.

நாகர்கோவில் :

நாகர்கோவில் பள்ளிவிளை அம்மன்கோவில் வடக்குதெருவை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி நகோமி(41), இவர்களது மகள் ஜாஸ்மின்(19).

இவர் ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரும் பள்ளிவிளை அம்மன்கோவில் வடக்கு தெருவை சேர்ந்த பவின்(21) என்பவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு அவர்கள் இருவரும்வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

இது குறித்து வடசேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து ஜாஸ்மினை மீட்டு வந்தனர். பின்னர் தோட்டியோடு பகுதியில் உள்ள காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டார்.

பின்னர் மீண்டும் 20 நாட்கள் கடந்த நிலையில் ஜாஸ்மின் வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் கடந்த 29.9.2023 அன்று ஜாஸ்மின் மீண்டும் மாயமானார். இந்த நிலையில் மகளை மீட்டு தரகோரி நகோமி வடசேரி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நகோமி மதுரை உயர் நீதிமன்றத்தில் மகளை மீட்டு தரகோரி மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக விசாரணை நடத்த வடசேரி போலீசுக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் வடசேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News