உள்ளூர் செய்திகள்

தெங்கம்புதூர்-குளத்துவிளையில் மக்களிடம் குறை கேட்ட மேயர்

Published On 2023-09-12 09:14 GMT   |   Update On 2023-09-12 09:14 GMT
  • நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில் ஆய்வு நடத்தி முடித்தார்
  • மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நாகர்கோவில் :

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில் ஆய்வு நடத்தி முடித்த நிலையில் இன்று காலை 52-வது வார்டுக்கு உட்பட்ட தெங்கம்புதூர், குளத்து விளை ஆகிய பகுதிகளில் மேயர் மகேஷ் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது மாநகராட்சி நல அலுவலர், மாநகராட்சி அதிகாரிகள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News