உள்ளூர் செய்திகள்

போலி நகை விளம்பரங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2023-10-22 07:35 GMT   |   Update On 2023-10-22 07:35 GMT
  • குமரி மாவட்ட அனைத்து விஸ்வகர்மா சமுதாய கூட்டமைப்பு நிறுவன தலைவர் பேட்டி
  • பணத்தினை கொண்டு தரமான நியாயமான முறையில் நகைகளை வாங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நாகர்கோவில் :

குமரி மாவட்ட அனைத்து விஸ்வகர்மா சமுதாய கூட்ட மைப்பு நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் நடைபெற்றது. பின்னர் குமரி மாவட்ட அனைத்து விஸ்வகர்மா சமுதாய கூட்டமைப்பு நிறுவன தலைவர் பாஸ்கரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தங்க நகை வியாபாரத்தில் செய்கூலி, சேதாரம் இல்லை என்ற கவர்ச்சிகரமான போலி யான விளம்பரத்தை அறிவித்து மக்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்தோடு செயல்பட்ட நிறுவனத்தை கூட்டமைப்பின் சார்பாக பலமுறை கண்டித்தும் மிகபெரிய அளவில் பொது மக்களை ஏமாற்றி உள்ளனர்.

மேலும், செய்கூலி மற்றும் சேதாரம் இல்லாமல் எந்த ஒரு நகையும் செய்ய இயலாது என்பது அனைவரும் அறிந்த உண்மையே. இது போன்ற போலி விளம்பரங்களால் பல லட்சம் விஸ்வகர்மா நகை தொழிலாளர்களின் தொழிலும், வாழ்வாதாரமும் பாதிக் கப்பட்டுள்ளது. பொதுமக்களும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

எனவே நியாயமற்ற போலி விளம்பரங்களை உடனடியாக தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தனி கவனம் செலுத்தி போலியான விளம் பரங்களை தடுத்திட வழிவகை செய்து பல லட்சம் விஸ்வகர்மா நகை தொழிலாளர்கள் மற்றும் நகை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காதவாறு பாதுகாத்திட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கி றோம். மேலும் பொதுமக்கள் போலி விளம்பரங்களை கண்டு ஏமாறாமல் இருக்குமாறும் தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தினை கொண்டு தரமான நியாயமான முறையில் நகைகளை வாங்கிடுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது விஸ்வகர்மா கூட்டமைப்பின் தலைவர் மாணிக்கம், செய லாளர் முத்துகுமார், பொருளா ளர் நாகேஷ், வழக்கறிஞர் பால முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News