உள்ளூர் செய்திகள்

தக்கலை அருகே விவசாயியை கொன்ற டிரைவர் கேரளாவில் பதுங்கல்

Published On 2023-11-11 07:39 GMT   |   Update On 2023-11-11 07:39 GMT
  • தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை
  • தக்கலை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தக்கலை :

தக்கலை அருகே உள்ள சடையமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 53), விவசாயி.

இவரது உறவினர் பெண்ணை, அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறு வன டிரைவர் சுரேஷ் கிண்டல் செய்து உள்ளார். இதனை மோகன்தாஸ் தட்டிக் கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது.

சம்பவத்தன்று மோகன் தாஸ் தோட்டத்தில் இருந்த போது, சுபாஷ் அங்கு வந்தார். அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த சுபாஷ், மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த மோகன் தாசை, உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவனந்த புரம் தனியார் ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மோகன்தாஸ் நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி கீதா, தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் தக்கலை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தலைமறைவாக உள்ள சுபாசை பிடிக்க தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நடத்திய விசார ணையில் சுபாஷ், கேரளா விற்கு தப்பி சென்றிருப்பது தெரிய வந்தது. அதன்பேரில் தனிப்படையினர் கேரளா விரைந்துள்ளனர்.

Tags:    

Similar News