உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

இரணியல் அருகே மூதாட்டி திடீர் சாவு

Published On 2022-11-04 13:59 IST   |   Update On 2022-11-04 13:59:00 IST
  • ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை
  • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி:

இரணியல் அருகே வில்லுக்குறியை அடுத்த குதிரைப்பந்திவிளையைச் சேர்ந்தவர் தங்கபெருமாள். இவரது மனைவி சரஸ்வதி (வயது 70). சரஸ்வதிக்கு சர்க்கரை நோய் இருந்து வந்ததாகவும், அதற்காக தினமும் மாத்திரை சாப்பிட்டு வந்ததாகவும் தெரிகிறது. கடந்த 25-ந் தேதி சர்க்கரை மாத்திரை சாப்பிட்டதும் வெற்றிலை போட்டதால் வாயில் நுரை தள்ளிய நிலையில் சரஸ்வதி மயங்கி விழுந்துள்ளார்‌. உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அய்யப்பன் (43) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News