உள்ளூர் செய்திகள்

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதி மாணவன் படுகாயம்

Published On 2022-09-02 07:45 GMT   |   Update On 2022-09-02 07:45 GMT
  • மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
  • மாணவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

கன்னியாகுமரி:

மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை திவண்டாக்கோட்டையை சேர்ந்தவர் ரெத்னகுமார்.

இவரது மகன் டெனி (வயது 19). 12-ம் வகுப்பு முடித்துவிட்டு பொறி யியல் கல்லூரியில் சேர விண்ணப்பம் செய்துள் ளார்.

சம்பவத்தன்று டெனி தனது மோட்டார் சைக்கி ளில் மணவாளக்குறிச்சி - நாகர்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தார். பின்னால் அதே பகுதி யைச் சேர்ந்த ஆசீர் அமர்ந்திருந்தார்.

மோட்டார் சைக்கிள் வெள்ளமோடி பெட்ரோல் பங்க் அருகே செல்லும்போது அங்கு குறுக்கே சென்ற இன்னொரு மோட்டார் சைக்கிள் டெனி மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் படுகாயமடைந்த டெனி அருகில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இச்சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News